எழுந்து
வா
கிதியோன்
சேனையே
எழுந்து வா கிதியோன் சேனையே
இருக்கும் பலத்தோடு நீ எழுந்து வா
எழும்பு எழும்பு கர்த்தரின் புயத்தால்
பெலன்கொண்டு நீ இன்றே எழும்பிடு
எரிகோ கோட்டையை நீ உடைத்திட
எரியும் அக்கினி தணித்திட
சிங்கத்தின் வாயை நீ கிழித்திட
இன்றே நீ எழுந்து வா வாலிபனே - எழும்பு
கர்த்தர் உன்னோடு இருக்கும்போது
கலக்கமும் பயமும்; உனக்கு ஏன்?
அழிந்து போகும் மானிடரை
மீட்டெடுக்க எழுந்து வா - எழும்பு
சிறுகூட்டம் என்று திகைக்காதே
பெருங்கூட்டம் உன்னால் வீழ்ந்திடுமே
பாகாலின் பலிபீடம் தகர்ததிட
பராக்கிரமசாலியே நீ எழுந்து வா – எரிகோ